Episode Description
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம், கட்சி சாரா, இலாப நோக்கற்ற, அரசு பதிவு பெற்ற, தன்னார்வ சமூக சேவை அமைப்பு.
சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற திரு. SKM மயிலானந்தன் அவர்கள் இவ்வமைப்பின் தலைவாரக இருந்து வழிநடத்தி வருகிறார்.
தேசிய அளவிலே சிறந்த நுகர்வோர் பாதுகாப்புக் குழுவிற்கான விருதைப் பெற்றுள்ளோம்.
தமிழக அரசு R. பாலசுப்ரமணியன் அவர்களை சிறந்த நுகர்வோர் ஆர்வலர் என தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்துள்ளது.
நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘நுகர்வோர் காவலன்’ எனும் மாத இதழை 1991ம் ஆண்டுமுதல் பிரசுரித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பரிகாரம் பெற்றுத்தர தேவையான அனைத்து உதவிகளையும் கட்டணமின்றி செய்து தருகிறோம். ‘நுகர்வோர் காவலன்’மாத இதழைப் பெறவிரும்பினால் ரூ. 500/- டெபாசிட் சந்தா செலுத்துவதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு இந்த இதழை பெறலாம். இவ்வியக்கத்தில் இணைந்துகொள்ள விரும்பினால் ரூ. 500/- ஆயள் சந்தா செலுத்தி உறுப்பினராகலாம். இவ்வியக்கம் செய்துவரும் நற்பணிகளுக்கு உதவ விரும்பினால் நிதியுதவி செய்திடலாம். ஏய்த்தலில்லாத விழிப்புணர்வு கொண்ட நல்லதோர் சமுதாயம் படைப்போம். UPI: Q52825105@ybl
UPI மூலம் பணம் செலுத்திய பின், whatsapp +919842726048 மூலம் கீழே குறிப்பிட்டுள்ள விவரங்களை அனுப்புங்கள்.
- பெயர்: _________________
- முகவரி: ___________
- தொலைபேசி எண்: _________
- தொகை எதற்கு
- நுகர்வோர் காவலன் சந்தா : Rs. _____
- ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய உறுப்பினர் சந்தா: Rs. _____
- நன்கொடை: Rs. _____
Music Courtesy: Jason Shaw, audionautix.com